உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம்மில் கள்ள நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி பகுதியில் முன்ஷிகஞ்ச் சாலை சப்ஜி மண்டி அருகே உள்ள ஏடிஎம்மில் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துள்ளனர். அப்போது ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா என்று இருக்கும் இடத்தில் சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த 200 ரூபாய் நோட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.